Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10-ம் வகுப்பு பாடத்தில் 'பன்முகக் கலைஞர்' என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு!

05:17 PM May 01, 2024 IST | Web Editor
Advertisement

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பன்முகக் கலைஞர் என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. 

Advertisement

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர்,  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில்,  கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக,  பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும்,  தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர்.  பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக அவரின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
10th StandardbookkalaignarKarunanidhiKarunanidhi Historynews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article