Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆபாச படம் அனுப்புவதாக துணை நடிகரிடம் பணம் பறித்த கும்பல் - போலீசார் விசாரணை!

10:57 AM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

சைபர் கிரைம் எனக்கூறி துணை நடிகரிடமிருந்து பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் தாமோதர கண்ணன்.  இவர் சினிமாவில் துணை நடிகராக பணியாற்றி வருகிறார்.  துணை நடிகர் தமோதர கண்ணன் கடந்த ஒரு மாதமாக சே ஹாய் என்ற ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்துள்ளார்.  இந்த ஆப் மூலம் அகிலா என்ற பெண் அறிமுகமாகி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில்,  நேற்று முன்தினம் தமோதர கண்ணனிடம் அகிலா தனக்கு 1000 ரூபாய் பணம் அனுப்பினால் தன்னுடைய ஆபாச படத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி தாமோதர கண்ணன் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.  அந்த பெண் கூறியது போல் ஆபாச படம் அனுப்பாமல் ஏமாற்றியதால் கண்ணன் பணம் அனுப்பிய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் துணை நடிகர் தமோதர கண்ணனை வேறொரு செல்போன் எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், தாங்கள் சைபர் கிரைம் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர்,  கண்ணனிடம் அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரிடம் நீங்கள் ஆபாசமாக பேசி படம் அனுப்புமாறு வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.  அகிலா தற்கொலை நீங்கள் தான் காரணம் என மிரட்டியுள்ளனர்.  அதுமட்டுமின்றி, உங்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க
60 ஆயிரம் ரூபாயை உடனே அனுப்புமாறு கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ந்து போன துணை நடிகர் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர்கள் கூறிய எண்ணில் முதற்கட்டமாக 13 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.  தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த துணை நடிகர் தமோதர கண்ணன் உடனே இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Next Article