Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெருங்கும் தீபாவளி பண்டிகை; சென்னையில் 18,000 போலீசார் குவிப்பு!!

07:02 AM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 18,000 போலீசார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிகளவு கூடும் இடங்களில், 3 அடுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட பல பகுதிகளில் நான்கு மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்காணித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement
Next Article