Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் உயிரிழப்பு! - கேரளாவில் பரபரப்பு!

03:34 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் – ராயப்பேட்டையில் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இந்நிலையில், அந்த சிறுவன் கவலைக்கிடமானதை தொடர்ந்து மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று உயிரிழந்தார். இந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
deathfeverHealthKeralaNipah virusspreadVirus
Advertisement
Next Article