Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“முதலீடு எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே முதலமைச்சரின் கேள்வியாக இருந்தது!” - டி.ஆர்.பி.ராஜா பேட்டி

08:06 PM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

எத்தனை லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் வரும் என்பதே முதலமைச்சர் கேள்வியாக இருந்தது என தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

Advertisement

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உள் பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 30000 மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருகைதந்தனர்.

மாநாடு இன்று நிறைவடைந்ததை அடுத்து தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:

அனைவருக்கும் எல்லாம் என்கிறப்படி தான் திமுக ஆட்சி நடைபெறுகிறது. பெண்கள் உள்பட அனைவரையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முதலமைச்சரின் மிக கவனத்துடன் இருந்தார். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தின் ஒரு ட்ரில்லியன் டாலர் கனவு தொடங்க வேண்டும் என்று முதல்வர் கருதினார். வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று விளக்கி கூறி முதலீடுகளை தமிழகத்திற்கு ஈட்டி தந்தார்.

தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை அளிக்க வேண்டும் இன்று கருதி முதலீடுகளை தமிழகத்தின் தென் பகுதிகளிலும், வடக்கு பகுதிகளிலும், சென்னையிலும் குவிய வைத்தோம். வரும் வாரத்தில் கூடுதலாக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இந்த முதலீடுகள் இரண்டு நாட்கள் மாநாடுடன் முடிவதில்லை. இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழ் நிலத்திற்கு வந்து சேரும். 28ம் தேதி முதலமைச்சர் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் செல்ல இருக்கிறார்.

தற்போது வரை 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆரம்ப முதலே எத்தனை லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்று முதல்வர் எங்களிடம் கேட்கவில்லை. எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றே கேட்டு வந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு நின்று விடாமல், அவற்றை செயல்படுத்துவதில் இந்த அரசு களத்தில் நின்று பணியாற்றும். இவ்வாறு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

Tags :
Aachi masalaChennaiDMKGlobal investors meetGlobal Investors Meet 2024MK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesPiyush GoyalRamraj CottonTamilNaduTNGIM2024TRB RajaaTRBRajaa
Advertisement
Next Article