Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விளையாட்டு விபரீதமானது | குழந்தையின் கண்முன்னே பறிபோன உயிர்! பதற வைக்கும் வீடியோ....

09:16 AM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

தன் குழந்தை எதிரிலே நான் சாக போகிறேன் என விளையாட்டாகக் கூறி வீடியோ எடுத்தவர், சில நொடியிலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி
ஓட்டுநர் ஜெகதீஷ். இவருக்கு திருமணமாகி, 1- ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை உள்ளது.
லாரி ஓட்டுநராக பணிபுரியும் ஜெகதீஷ் தன் மனைவி அவரது பெற்றோரைப் பார்க்க
சென்றிருந்த நிலையில் தன் குழந்தையுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.

அப்போது தன் குழந்தை எதிரியிலேயே நான் சாகப் போறேன் டா என கூறி இதை வீடியோ
எடுக்கலாம் என செல்போனை ஆன் செய்து வைத்து விட்டு தன் மகனுடன் பேச்சுவார்த்தை
கொடுத்துக் கொண்டே படுக்கை அறையிலிருந்த மின் விசிறியில் புடவையில் தன்
கழுத்திற்கு சுருக்கு போட்டுள்ளார்.

சுருக்கு போட்ட சில நொடியிலேயே ஜெகதீஷ் உயிர் பிரிந்தது. பின்னர் தன் தனது
தந்தை விளையாட்டாகத் தான் நடிக்கிறார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, அசைவற்றுக் கிடந்த சன் தந்தைக்கு மூச்சு இருக்கிறதா என கைவைத்து
பார்த்து மூச்சு நின்றுவிட அவரைக் காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ தற்போது
இணையத்தில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாக வீடியோ எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மேல்செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
sengamThiruvannamalai
Advertisement
Next Article