Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக மாநாடு - வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி..!

01:12 PM Oct 27, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சிறக்க, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்துகள் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

வி.சாலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் நடந்து வந்துகொண்டிருக்கின்றனர். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தவெக சார்பில் தனி வழித்தடம் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இருந்து 4 கி.மீட்டர் தூரத்துக்கு தனியாக ஒருவழித்தடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இந்த வழியில் கட்டணமின்றி செல்கின்றனர். உளுந்தூர்பேட்டை, ஓங்கூர் சுங்கச் சாவடிகளிலும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

மாநாட்டுத் திடலில் 70000 இருக்கைகள் போடப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவ்விடம் முழுவதும் நிரம்பி வழிவதை காணமுடிகிறது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  மதியம் 2 மணி முதல் கலை நிகழ்ச்சிகள், நான்கு மணி முதல் தலைவர்களின் உரைகள், மற்றும் ஆறு மணிக்கு விஜய் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சிறக்க, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்துகள் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article