Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விராட் கோலிக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்?

07:22 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் விராட் கோலிக்கு பயங்கரவாதகள் மிரட்டல் விடுத்ததாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17-வது சீசன்,  அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.  இந்நிலையில், நேற்று (மே 21) முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில்,  13.2 ஓவர்களில் இலக்கை கடந்து,  164 ரன்களை விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் முதல் அணியாக  நுழைந்தது.

இதையடுத்து,  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,  4-வது இடம் பெற்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.  இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும்.  வெற்றி பெறும் அணி,  முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஹைதராபாத் அணியுடன் மோதும்.  இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

இந்த நிலையில்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த பயிற்சியையும், செய்தியாளர் சந்திப்பையும் பெங்களூரு அணி ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
IPL2024Rajsthan RoyalsRCB vs RRRoyal Challengers BengaluruRR vs RCBVirat kohli
Advertisement
Next Article