Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அசாமில் பதற்றம் : "வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டதும் சுடப்படுவார்கள்" - ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு!

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
08:13 AM Jun 14, 2025 IST | Web Editor
அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இரவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சுடப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement

வடகிழக்கு மாநிலமான அசாமில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த 8ல் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தின்போது பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், சில இடங்களில் மாட்டிறைச்சி வீசப்பட்டதாகவும் முதலமைச்சர் சர்மா குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement

இது தொடர்பாக பல்வேறு இடங்களில், 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, துப்ரியில் உள்ள கோயில் அருகே நேற்று முன்தினம் மாட்டிறைச்சி வீசப்பட்டதாக கூறி ஹிந்துக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுனர்களை ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அப்பகுதியில் இனக்கலவரம் ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் மத்திய மற்றும் மாநில போலீஸ் படைகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது "இரவு நேரங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், மாலை 6 மணிக்குப்பின் கண்டதும் சுடப்படுவார்கள். சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) நிலைநிறுத்தப்படுகின்றன.

குற்றவாளிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்படும். மாட்டு இறைச்சி கடத்தல் மற்றும் வங்கதேச சக்திகளின் தூண்டுதல்களே இந்தப் பதட்டங்களுக்குக் காரணம்" என்று தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags :
assamassamcmcheifministerHimanta Biswa SarmaOrdersshootingorderViolence
Advertisement
Next Article