Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

12:21 PM Jul 18, 2024 IST | Web Editor
Advertisement

அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்.

Advertisement

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய்யை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.  ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, பாமாயிலை மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.

அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30-க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.25 -க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி உள்ளது.  பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.  பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் எந்தவித தங்கு தடையும் இன்றி வினியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Dallpalm oilrationRation Shoptamil naduTenderTN Govt
Advertisement
Next Article