Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
03:28 PM Jun 18, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தது.

Advertisement

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், வருகின்ற 07.07.2025 அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8000 சதுர அடி பரப்பளவில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். மேலும், காலை 07.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மற்றும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
murugan templeTamilThiruchendur
Advertisement
Next Article