பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடக்கம்!
மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
கோவை காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படிக்கும் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன், தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜ் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் : இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது :
“மாணவர்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் படிக்கும் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.