Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… நெல்லை டவுண் பகுதியில் சிக்கித் தவிக்கும் முதியோர்கள்...!

10:01 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு கவனத்திற்கு… திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியில், மழை வெள்ளநீரில் சிக்கிக் கொண்டுள்ள முதியவர்களை, மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 85 வயது முதியவரான சண்முகவடிவு, 65 வயது பால சுப்பிரமணியன் மற்றும் 55 வயதான ராஜம் ஆகியோர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் கீழ்கண்ட முகவரியில் சிக்கித்தவிக்கின்றனர் எனவும், அவர்களை மீட்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முகவரி: எண். 36, மாதா பூங்கொடி தெரு, திருநெல்வேலி டவுண் - 627006

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari RainsNellaiNellai FloodsNews7Tamilnews7TamilUpdatesrain alertrainfallSouth TN RainsTamilnadu RainsTenkasi RainsThoothukudiThoothukudi RainsTirunelveli Rains
Advertisement
Next Article