Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

07:54 AM Dec 30, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும்,  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  டிச.27 முதல் வரும் ஜன. 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் – தேமுதிக சார்பில் விரைவில் அமைக்க உள்ளதால் தகவல்.!

மேலும் வரும் டிச.31ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
ChennaiRMCdistrictsIMDIndianMeteorologicalDepartmentRainAlertrainfallRainUpdateTamilNaduTNDistrictsWeatherUpdate
Advertisement
Next Article