Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10, 11 மற்றும்12-ம் வகுப்பு துணைத்தோ்வு முடிவு எப்போது? வெளியான அப்டேட்!

10:19 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

"தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத்தோ்வு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளின் முடிவுகள் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழாக வெளியிடப்படவுள்ளன.

அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு ஜூலை 26-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு ஜூலை 30-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூலை 31-ஆம் தேதியும் துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் தங்கள் முடிவுகளை மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : 3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் – அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாவட்ட தோ்வுத்துறை உதவி அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவுசெய்ய வேண்டும். அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு ஜூலை 29, 30-ஆம் தேதிகளிலும், பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1, 2-ஆம் தேதிகளிலும் விண்ணப்பிக்க வேண்டும். இதில் விடைத்தாள் நகல் பெற்ற மாணவா்கள் மட்டுமே பின்பு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
10thExamResult11thExamResults12thExamresultsstudentssupplementaryexamTamilNadu
Advertisement
Next Article