தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மாவட்ட ஆட்சியர்களாக, விருதுநகருக்கு சுகபுத்ரா, பெரம்பலூருக்கு அருண்ராஜ், திருப்பூருக்கு நாரணவரே, திருச்சிக்கு சரவணன், மதுரைக்கு பிரவீன்குமார், ஈரோடுக்கு கந்தசாமி, சிவகங்கைக்கு பொற்கொடி, நாமக்கல்லுக்கு துர்கா மூர்த்தி, செங்கல்பட்டு சினேகா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஆணையர்களாக, திருச்சிக்கு மதுபாலன், ஆவடிக்கு சரண்யா, தூத்துக்குடிக்கு பானோத் மருகேந்தர் லால், திருப்பூருக்கு அமித், திருநெல்வேலுக்கு மோனிகா ராணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இணை ஆணையராக சென்னைக்கு ர. அனாமிகா, வட்டார துணை ஆணையராக எச்.ஆர். கெளசிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் சென்னை முதன்மை செயலாளராக ராஜேந்திர ரத்னு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ், நில சீர்திருத்தத்தில் டுதல் தலைமைச் செயலாளராக ச விஜயகுமார், உயர்கல்வித் துறை செயலாளராக பொ. சங்கர் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக சமயமூர்த்தி, நிதித் துறை சிறப்புச் செயலாளர் வெங்கட்டேஷ், போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் லில்லி, வருவாய் பேரிடர் மேலாண் துறை கூடுதல் செயலாளராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.