Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம் - முக்கிய அப்டேட்!

09:47 PM Apr 21, 2024 IST | Web Editor
Advertisement

சூர்யா - ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisement

தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நாயகனாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் முதன் முறையாக சேர்ந்து நடித்திருந்தனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களின் போது காதல் மலர்ந்தது.

உயிரிலே கலந்தது, காக்க காக்கா, மாயாவி  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் இணைந்து சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்திருந்தனர்.
அதன் பிறகு இருவரும் தனித்தனியாக நடித்து வருகின்றனர். இதனால் இந்த ஜோடி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு அமையவில்லை.

பல சினிமா மேடைகளில் சூர்யா மற்றும் ஜோதிகாவிடம் நீங்கள் சினிமாவில் எப்போது மீண்டும் இணைந்து நடிப்பீர்கள் என்கிற கேள்வியை பலரும் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பெங்களூரு டேஸ் படத்தை இயக்குநர் அஞ்சலி மேனன் அல்லது சில்லுக்கருப்பட்டி பட இயக்குநர் ஹாலிதா சமீம் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தனித்தனியே கங்குவா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியான செய்திகள் சூர்யா-ஜோ ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
Jothikanew movieSuryatamil cinema
Advertisement
Next Article