Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'அரண்மனை 5' படத்தின் பணியில் இயக்குனர் #SundarC? - லேட்டஸ்ட் அப்டேட்!

08:40 AM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

அரண்மனை திரைப்படத்தின் 5 பாகப் பணியில் இயக்குநர் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் 'முறைமாமன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் சுந்தர் சி. தொடர்ந்து தமிழில் வெளியான முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தார். இவர் இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான 'அன்பே சிவம்' திரைப்படம் இன்று பேசப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியான கால கட்டத்தில் அது பெரிய அளவில் பாராட்டப்படவில்லை என்றாலும், இப்பொழுது அது மிகப்பெரிய அளவில் வியந்து பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படத்தை இயக்கிற சுந்தர் சி, தொடர்ச்சியாக அரண்மனை 2, அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 ஆகிய நான்கு திரைப்படங்களை கொடுத்தார். இவர் தற்போது வடிவேலுவை வைத்து 'கேங்கர்ஸ்' படத்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து, மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

முதல் மூன்று பாகங்களுக்குக் கிடைத்ததைவிட அரண்மனை 4 படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், அடுத்ததாக இதன் 5 ஆம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர். சி இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அரண்மனை - 5 படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் துவங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை அடுத்தாண்டு கோடை வெளியீடாகக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அரண்மனை 5 படத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
Next Article