Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸி. க்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி - இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

ஆஸி. க்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
09:34 PM Mar 04, 2025 IST | Web Editor
Advertisement

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

11 லீக் போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இதில் 44ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தலான வெற்றி பெற்றது. தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக விளையாடி 5விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அரையிறுதி போட்டி துபாயில் உள்ள இண்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் விளையாட ஆரம்பித்தபோதே முதல் ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து கூப்பர் டக் அவுட் ஆனார்.


இதனைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மித் உடன் கைகோர்த்த ஹெட் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து 39ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் ஸ்மித் அடித்தும் , நிதானமாகவும் விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். இதனைத் தொடர்ந்து 73ரன்களில் ஸ்மித்தும், 61ரன்களில் கேரியும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா அணி 9விக்கெட்கள் இழப்பிற்கு 264ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்களையும் , ஜடேஜா மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டையும் அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா  தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 265ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43ரன்களிலேயே 2 முக்கிய விக்கெட்களை எடுத்து அதிர்ச்சி கொடுத்தது. கேப்டன் ரோஹித்தும் , சுப்மன் கில்லும் அவுட்டானதை தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயஷ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரேயஷ் ஐயர் அரை சதம் வாய்ப்பை இழந்து 45ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 27ரன்களுக்கு ஆட்டமிழக்க கே.எல்.ராகுலுடன் கைகோர்த்தார் விராட் கோலி.


விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எண்ணிக்கையை அதிகரித்தபோது விராட் கோலி 84ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்க நிதானமாக 4பந்துகளை எதிர்கொண்ட பாண்டியா 5வது பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து அதிரடியாக சிக்சர்களை விளாசிய பாண்டியா வெற்றிக்கு 6ரன்கள் இருக்கும்போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுட கைகோர்த்த ஜடேஜா கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது

இதனைத்தொடர்ந்து இந்திய அணி 4விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள்  நுழைந்தது.

Tags :
அரையிறுதி_போட்டிஆஸ்திரேலியா_கிரிக்கெட்இந்தியா_கிரிக்கெட்கிரிக்கெட்_செய்திகள்தமிழ்நாடு_கிரிக்கெட்சாம்பியன்ஸ்_டிராஃபி_2025விராட்_கோலிவருண்_சக்கரவர்த்திAustraliaICC Champion TrophyIND vs AusIndia
Advertisement
Next Article