Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் - பள்ளி நேரத்தில் அழைத்துச் சென்றதால் சர்ச்சை!

தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் நடத்திய நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தின்போது பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
08:34 PM Jun 20, 2025 IST | Web Editor
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் நடத்திய நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தின்போது பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இன்று பள்ளி வேலை நாளாக இருந்தும் த.வெக.நிகழ்ச்சிக்கு வகுப்புகளை
புறக்கணித்து மாணவர்களை அழைத்து சென்றது பெற்றோர்கள் இடையே கடும் அதிருப்பதியை ஏற்படுத்திய நிலையில் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி செக்கடி தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு அனுப்பியது தொடர்பாக கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர்(தொடகக் கல்வி) பாஸ்கரன் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலில் பள்ளி வளாகத்தில் விழா நடத்த திட்டமிட்டடு அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே தனியார் மண்டபத்தில் விழா நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags :
kovilpattiThoothukudiTVKVijayvijay
Advertisement
Next Article