Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புயல் எச்சரிக்கை - புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் டிச. 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

08:53 PM Dec 01, 2023 IST | Web Editor
Advertisement

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் டிச.4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4ம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், டிச. 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து,  இன்று,  காலை 11 மணி அளவில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 730 கி.மீ., சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 740 கி.மீ., நெல்லூருக்கு தென்கிழக்கே 860 கி.மீ., பாபட்லாவிலிருந்து தென்கிழக்கே 930 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 910 கி.மீ.  என நிலை கொண்டிருந்தது.

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் வரும் திங்கட்கிழமை (04-12-2023) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
HolidayskaraikalpudhucherrySchool
Advertisement
Next Article