Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரையை நோக்கி வரும் டானா புயல்!... எங்கே கரையை கடக்கும்?

12:10 PM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று மேலும் வலுவடைந்துள்ள நிலையில் இன்று தீவிரப் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் டானா புயலாக மாறியது. அத்துடன் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் வட மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

இதையடுத்து, வடக்கு ஒரிசா- மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை கரையைக் கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Tags :
Cyclone DanarainsstormWest bengal
Advertisement
Next Article