Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகை ஷகீலாவை தாக்கிய வளர்ப்புமகள் - சமாதானம் பேச வந்த வழக்கறிஞர் மீதும் தாக்குதல்.!

06:47 AM Jan 21, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை ஷகீலாவை  அவரது வளர்ப்பு மகளான ஷீத்தல் தாக்கிய நிலையில் அவரிடம் சமாதானம் பேச வந்த வழக்கறிஞரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

பிரபல நடிகை ஷகீலா சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது சகோதரர் இறந்து விட்ட காரணத்தால் அவரது மகள் ஷீத்தல் என்பவரை வளர்ப்பு மகளாக நடிகை ஷகீலா வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வீட்டில் வளர்ர்பு மகளான ஷீத்தல் நடிகை ஷகீலாவை தாக்கி விட்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஷகீலாவின் தோழி மூலம் தகவல் அறிந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சவுந்தர்யா என்பவர் சமாதானம் பேசுவதற்காக கோடம்பாக்கம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வழக்கறிஞர் ஷீத்தலை போனில் பேசி வீட்டிற்கு அழைத்தார். ஷீத்தல் தனது தாயார் சசி, சகோதரி ஜமீலாவுடன் வந்தார். வழக்கறிஞர் சவுந்தர்யா சமாதானம் பேசி கொண்டிருந்த போது ஷீத்தல் திடீரென வீட்டில் இருந்த சிகரெட் அணைக்கும் ட்ரே கொண்டு அவரது தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஷீத்தலின் தாயார் சசி வழக்கறிஞரின் கையை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை ஷகீலாவிற்கு வளர்ப்பு மகளான ஷீத்தல், அவரது தாயார் சசி, சகோதரி ஜமீலா கொலை மிரட்டல் விடுத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டனர். இதன் பிறகு வழக்கறிஞர் சவுந்தர்யா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் வீட்டிற்கு சென்று நடிகை ஷகீலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Actress ShakeelaActress Shakeela with DaughterFightShakeela DaughterSheethal
Advertisement
Next Article