நெல்லை - பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக நெல்லை-பெங்களூர் சிவமொக்கா ரயில் நிலையம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக முன்னதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து வருகின்ற 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை வழியாக மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12:30 மணிக்கு பெங்களூர் சிவ மொக்கா ரயில் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறு மார்க்கமாக பெங்களூர் சிவ மொக்கா ரயில் நிலையத்திலிருந்து 18-ம் தேதி திங்கட்கிழமை மதியம் 2:15 மணிக்கு புறப்படும் ரயில் மதுரை, விருதுநகர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக திருநெல்வேலியை செவ்வாய்க்கிழமை காலை 10:15 மணிக்கு வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.