Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#GK19 - தென்சென்னையின் உள்ளூர் அரசியல்... கௌதம் கார்த்தியின் புதிய படம் அறிவிப்பு!

07:55 PM Sep 12, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

கடல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். அதனைத்தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், ஆக.16 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே நடிகை மஞ்சுமா மோகனுடன் திருமணமானது. தற்போது 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் கௌதம் கார்த்தியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜி.கே.19 எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன்மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.  இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படம் வெளியாக படக்குழு தரப்பு முடிவு செய்துள்ளது. 

இந்தப்படம் குறித்து இயக்குநர் தினா ராகவன் கூறியதாவது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.
 

Tags :
Dhina RaghavanGautham KarthikGK19MG Studios
Advertisement
Next Article