மக்களவை தேர்தல் | கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் சோனியா காந்தி...? வெளியான புது தகவல்...!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில் இந்த தகவலை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள அவர், அத்தகைய விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சோனியா காந்தி கடந்த 1999 மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பல்லாரி தொகுதியில் பா.ஜ.க. மூத்த தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.