வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 3 நாட்களில் பாலம் அமைத்த ராணுவ வீரர்கள்!
10:11 PM Aug 01, 2024 IST
|
Web Editor
Advertisement
கேரள மாநிலம் வயநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க மூன்று நாள்களுக்குள் பாலத்தைக் கட்டி முடித்தது இந்திய ராணுவம்.
Advertisement
கேரளத்தின் பெய்த கனமழையால் பெய்லி பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது. 24 டன் எடை கொண்ட இந்தப் பாலம் 90 டன் வரையிலான எடையைத் தாங்கக்கூடியது. இந்நிலையில், இடிந்த பெய்லி பாலத்தினை சரிசெய்வதற்கு இந்திய ராணுவப்படையினர் கடந்த மூன்று நாள்களாக, கனமழையிலும் போராடி வந்தனர்.