Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது" - பிஆர்எஸ் எம்பி கவிதா

04:46 PM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் பதில் சற்று பயமாகத்தான் இருக்கிறது என  பிஆர்எஸ் எம்பி கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (டிச. 13) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் பெரும் சலசலப்பையும்  ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதிலில் “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. இது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது” என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பதிலுக்கு பல அரசியல் கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் எம்பியான கவிதா தெரிவித்துள்ளதாவது..

” மாதவிடாய் குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் அதிருப்தி அளிக்கிறது.  ஒரு பெண்ணாக, இதுபோன்ற அறியாமையை காண்பது சற்று பயமாகத்தான் இருக்கிறது.

பெண்களின் நெடிய போராட்டங்களும்,  பயணங்களுக்கும்  சமமான விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கானது.  மாதவிடாய் என்பது ஒரு சுய தேர்வு அல்ல; இது ஒரு உயிரியல் உண்மை.  எனவே ஊதியத்துடன் கூடிய விடுப்ப புறக்கணிப்பது என்பது  எண்ணற்ற பெண்கள் தாங்கும் உண்மையான வலியை புறக்கணிப்பதற்கு சமம்.

ஒரு பெண்ணாக, பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் இல்லாததைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. கொள்கை உருவாக்கத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை இது காட்டுகிறது” என பிஆர்எஸ் எம்பி கவிதா தெரிவித்துள்ளார்.

Tags :
BRSbrs partyKalvakunthala KavithaKavitha MPMenstral LeaveMenstrationSmrithi Irani
Advertisement
Next Article