Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆசிரியர் கல்வியியல் பல்கலை. இணைப் பதிவாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்!

10:42 AM Aug 30, 2024 IST | Web Editor
Advertisement

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆராய்ச்சி மாணவிகள் பலருக்கு பல்கலைக்கழக இணை பதிவாளர் மோகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணை பதிவாளராக செயல்பட்டு வருபவர் கே. மோகன். இவர் இந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவிகள் பலரிடம் தகாத வார்த்தைகளால் பேசியும், பாலியல் வன்புணரவு தொந்தரவுகளை அளித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக இணைப் பதிவாளர் கே.மோகன் அளிக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பல்கலைக்கழக பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இன்று இணை பதிவாளர் மோகனிடம் விசாரணை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவிகளும், இணைப்பதிவாளர் மோகனை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும், அவர் அழைக்கும்போதெல்லாம் அவரது ரூம்க்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பல மாணவிகள் வேதனையோடு, மிகுந்த அச்சத்துடனும் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் பல்கலைக்கழக இணை பதிவாளர் மோகனுக்கு ஆதரவாக, சிண்டிகேட் குழு உறுப்பினர் நடேசன் உள்பட பல அதிகாரிகள் செயல்படுவதாகவும் மாணவிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து உயர்கல்வித்துறை உரிய கவனம் செலுத்தி ஆராய்ச்சி படிப்பில் உள்ள மாணவிகளிடம் அத்துமீறிய பல்கலைக்கழக இணை பதிவாளர் மோகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
Next Article