Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோகன் யாதவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்!

12:51 PM Dec 12, 2023 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவை நேரில் சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

மத்தியப் பிரதேசத்தின் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவை தேர்தலில், 163 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
அந்த மாநில முதலமைச்சராக பாஜக-வின் சிவராஜ் சிங் சௌகான் பல ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தார்.  இந்த நிலையில், இம்முறை முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் – சென்னையில் 25 இடங்களில் நடத்த ஏற்பாடு

இவர் நாளை பதவியேற்க உள்ளார்.  இந்த நிலையில், மோகன் யாதவின் வீட்டுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், "அவருக்கு வாழ்த்து தெரிவித்து, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுப்பதாக உறுதியளித்தேன். எதிர்க்கட்சியாக,  மத்தியப் பிரதேசத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவோம்." என்று தெரிவித்தார்.

Tags :
CMIndiakamal nathMadhya pradeshMohan Yodavnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article