Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூய்மைப் பணியாளர்கள் விடுவிப்பு - பின்னணியில் நடந்தது என்ன?

தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர்.
04:35 PM Aug 14, 2025 IST | Web Editor
தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் விடுவித்துள்ளனர்.
Advertisement

 

Advertisement

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு, தங்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் 992 பேரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் சில மண்டலங்களில் (ராயபுரம், திரு.வி.க.நகர்) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் முடிவை எதிர்த்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் இந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு-பகலாக ரிப்பன் மாளிகை முன்பு பந்தல் அமைத்து அவர்கள் நடத்திய இந்தப் போராட்டம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், நேற்று நள்ளிரவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்தனர். போராட்டத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், சிலர் மயக்கமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட 992 தூய்மைப் பணியாளர்களையும் போலீசார் பல்வேறு தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த நிலையில், தற்போது அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

Tags :
ChennaiChennaiNewsLabourRightsProtestReleaseSanitationWorkers
Advertisement
Next Article