Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#samsung தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

06:50 PM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

காஞ்சிபுரம் கங்குவாசத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டமானது வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. 

Advertisement

ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள், போராட்டம் நடத்தும் ஊழியர்கள் , சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு தரப்பினர் சாம்சங் நிர்வாகம் கூறிய சலுகைகளை ஏற்றுக்கொண்டனர். மற்றொரு தரப்பினர் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க சாம்சங் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த வாரம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் மேற்கொண்ட போராட்ட பந்தல்கள் அகற்றப்பட்டன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மேலும், தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறு சாம்சங் ஊழியர்களில் ஒருதரப்பினர் போராட்டம் நீடித்து வந்த நிலையில் இன்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில்,   ” சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு. சிறு, குறு, நடுத்தரதொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள்.

இப்பேச்சுவார்த்தையில் சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் எற்றுக் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Protestsamsungtamil nadu
Advertisement
Next Article