Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Russia | குறைந்து வரும் மக்கள்தொகை - பொதுமக்களுக்கு #VladimirPutin 'நூதன' வேண்டுகோள்!

01:24 PM Sep 17, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, பொதுமக்களுக்கு அதிபர் புடின் நூதன வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisement

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்கள்தொகை முக்கிய பங்காற்றுகிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளைக் கண்டு உலகின் பிற நாடுகள் அச்சம் கொள்வதற்கு மிக முக்கிய காரணம் இந்நாடுகளில் உள்ள அதிகப்படியான மக்கள்தொகை தான். ராணுவம் போன்ற மனித வளம் தேவைப்படும் துறைகளுக்கு அதிக மக்கள் தொகை இருப்பது அவசியம். மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகள், ராணுவம் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு கூட ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அந்த வகையில் ரஷ்யா கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

ரஷ்யா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ரஷ்யா 2024-ம் ஆண்டு முதல் பாதியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாத இடையில், மொத்தம் 5,99,600 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2023-ம் ஆண்டின் பிறப்பு எண்ணிக்கையை விட 16,000 குறைவாகும்.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் புடின், நாட்டு மக்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தை பிறப்பை அதிகரிக்கும் செயலில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிபர் புடின் கூறியதாவது.

“உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள்தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. மாஸ்கோவில், 18 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் திறனை மதிப்பிடுவதற்காக இலவச கருவுறுதல் திரையிடல்களில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 24 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் 1.02 லட்சம் ரூபிள் வழங்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ 9.40 லட்சம் ஆகும்.

ரஷ்யாவில், 2023 ஜன., 1 நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு தோராயமாக 1.5 குழந்தைகளாக உள்ளது. இது மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 க்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Birth RateMoscowNews7TamilrussiaVladimir PutinwarYevgeny Shestopalov
Advertisement
Next Article