Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சத்தீஸ்கரில் சாலை விபத்து - 14 பேர் உயிரிழப்பு!

ராய்ப்பூர் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
08:59 AM May 12, 2025 IST | Web Editor
ராய்ப்பூர் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள சரகான் அருகே, பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்து கொண்டு, இரவு 12.15 மணியளவில் மினி லாரியில் வீடு திரும்பி உள்ளனர்.

Advertisement

அப்போது எதிரே அதிவேகமாக வந்த டிரெய்லருடன் மோதியதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் கரௌரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

Tags :
ChhattisgarhkilledRoad accident
Advertisement
Next Article