Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்பட்டது!

10:12 PM Oct 16, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர பிரதேசம் புதுச்சேரி மற்றும் நெல்லூர் பகுதிகளை நெருங்கி வட சென்னை பகுதி ஒட்டி நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி வலு குறைந்து நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது.

இதுவரை கன முதல் மிக கனமழை வரை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி பகுதிகளில் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பதிவாகியுள்ள நிலையில், இன்று சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்பொழுது, கன முதல் மிக கனமழை வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யvஉம் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த சிவப்பு நிற எச்சரிக்கை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiChennai rainsChennai Rains 2024deputy cmlow pressurenews7 tamilrain alertRain UpdatesRain Updates With News7 Tamiltamil naduWeatherweather forecastWeather Update
Advertisement
Next Article