Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

RCBvsPBKS | முதல் குவாலிஃபையரில் பெங்களூர் அணி அபார பந்து வீச்சு - 101 ரன்களில் சுருண்ட பஞ்சாப்!

நடப்பாண்டு ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணியை 101 ரன்களுக்கு பெங்களூர் அணி சுருட்டியுள்ளது.
09:12 PM May 29, 2025 IST | Web Editor
நடப்பாண்டு ஐபிஎல் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் அணியை 101 ரன்களுக்கு பெங்களூர் அணி சுருட்டியுள்ளது.
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணிக்கும் இடையேயான முதல் குவாலிஃபையர் போட்டி இன்று(மே.29) நடைபெற்று வருகிறது.

Advertisement

இரு அணிகளும் இதுவரை நடந்த 17 ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத நிலையில், இன்று நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக மோதுகின்றன. அதனால், இப்போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி பஞ்சாப் மகாராஜா யாதவீந்திர சிங் மைதனாத்தில் நடந்து வருகிறது. இப்போட்டிக்கான டாஸை வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிரங்கிய பஞ்சாப் அணி 78 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது.

பெங்களூர் அணியின் அபாரமான பந்து வீச்சால் 14.1 ஓவர்களியேயே பஞ்சாப் அணி ஆல் அவுட்டாகி சுருண்டது. இதன் மூலம் மொத்தமாக 101 ரன்கள் என்ற குறைந்தபட்ச ரன்களை பஞ்சாப் அணி அடித்திருந்தது. பெங்களூர் அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும்,  யாஷ் தயாள் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 102 ரன்களை பெங்களூர் அணி சேஸிங் செய்ய உள்ளது.

Tags :
CricketIPL2025Punjab KingsRCBvsPBKSRoyal Challengers BangaloreShreyas IyerVirat Kholi
Advertisement
Next Article