Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கலை நிகழ்ச்சியில் சேர்ந்து நடிக்கும் ரஜினி, கமல்” - #Actor கார்த்தி தகவல்!

04:53 PM Sep 08, 2024 IST | Web Editor
Advertisement

“நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சேர்ந்து நடிப்பதாக கூறியுள்ளனர்” என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூடத்தில் நடிகர் கார்த்தி பேசியதாவது;

ஜனவரியில் பணம் கிடைத்தது. ஐந்தாண்டு கால தாமதத்தால், வங்கி விதிமுறைகளுக்கு ஏற்றவாறு மூன்று மாதமாக வேலை வேகமாக சென்று கொண்டிருக்கிறது. நவம்பர், டிசம்பர் மழைக்கு முன்பாக கட்டிட வெளிப்பணிகளை முடிக்கும் பணியில் மும்ரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். மார்ச் மாதத்திற்குள் கட்டிடம் முடிக்க முடியும் என தெரிவித்து இருக்கிறார்கள்.

கலை நிகழ்ச்சியில் ரஜினியும், கமலும் ஒன்றாக மேடையில் நடிப்பது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்கின்ற ஒரு முயற்சியாகத்தான் இதை பார்க்கிறோம். ரஜினி சார் கொடுத்த ஐடியா தான் இது. கமல் சாருக்கும் பிடித்திருந்தது. எல்லோரும் சேர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 10 பாயிண்ட் கொடுத்தார்கள். அதற்கு நாங்கள் 37 பாயிண்ட் திருப்பி அனுப்பி இருக்கிறோம். தனுஷ் தொடர்பான கேள்வியை கொடுத்திருக்கிறோம். எங்கள் தரப்பில் இருந்து அனைத்தும் கொடுத்துவிட்டோம். அவர்கள் முடிவெடுத்து தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் முடிவு எடுக்க வேண்டும். பல நடிகர்கள் இங்கே வராதது ஒரு பிரச்னை இல்லை. நாம் எப்போது உதவி என்று கேட்டாலும் கூட அவர்கள் நமக்காக உதவி செய்வார்கள்” என தெரிவித்தார்.

Tags :
Actors AssociationkamalKarthiRajinikanth
Advertisement
Next Article