Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜபாளையம் | பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - எஸ்ஐஐ பணியிடை நீக்கம்!

05:48 PM Dec 26, 2024 IST | Web Editor
Advertisement

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு
ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன்
உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ்(54). இவர் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர்.

இதையும் படியுங்கள் : “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்” – பாஜக மாநில தலைவர் #Annamalai பரபரப்பு பேட்டி

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலருக்கு மது போதையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் காவலர் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவரை, பணியிடை நீக்கம் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
policeofficerrajapalayamsexualharreshment
Advertisement
Next Article