Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#RainAlert : தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

08:54 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் மியான்மர் கடலோரம் ஆகிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் வரும் 4ஆம் தேதி வடக்கு வங்க கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் வரும் 6ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி. திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Meteorological CentreRainrain alertTamilNadu
Advertisement
Next Article