Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தை குளிர்விக்க வருகிறது மழை... வானிலை மையம் சொன்ன குட்நியூஸ்!

07:45 AM Apr 12, 2024 IST | Jeni
Advertisement

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  

Advertisement

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவி வருகிறது.

அதன் காரணமாக இன்று  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  தஞ்சை, நெல்லை, திருவாரூர், கன்னியாகுமரி, நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும்
சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement
Next Article