Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் கனமழை எதிரொலி - சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ரத்து!

10:04 AM Jan 08, 2024 IST | Web Editor
Advertisement

தொடர் கனமழை காரணமாக சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இன்று (ஜன.08) ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று (ஜன. 07) முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்றும் (ஜன. 08) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: பொங்கலை முன்னிட்டு பல்லடத்தில் வித்தியாசமான “தை மகளே வா” நிகழ்ச்சி.!

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சார்பில்,  சென்னை ஒய்எம்சிஏ திடலில்நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி இன்று (ஜன.08) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BookFaircancelledChennaiChennai bookfairHeavy rainfallnews7 tamilNews7 Tamil UpdatesRain
Advertisement
Next Article