Rain Alert | காலை 10 மணி வரை கொட்ட போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் (ஜுன் 16) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, நேற்று (ஜுன் 17) காலை 05:30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இதேபோல், தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (ஜுன் 17) காலை 05:30 மணியளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக வரும் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.