Rain Alert | சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : ஒற்றை வார்த்தையால் பறிபோன மூதாட்டியின் உயிர்… உறவினர் கைது!
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று (ஜுன் 6) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.