Rain Alert | மக்களே உஷார்.. நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (27-11-2025) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை (நவ.28) 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
ரெட் அலர்ட்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
ஆரஞ்சு அலர்ட்
- மயிலாடுதுறை
- அரியலூர்
- திருச்சி
- சிவகங்கை
- ராமநாதபுரம்
மஞ்சள் அலர்ட்
- கடலூர்
- பெரம்பலூர்
- மதுரை
- விருதுநகர்
- தூத்துக்குடி