Rain Alert | குடை ரெடியா? 18 மாவட்டங்களை குறிவைத்த மழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இதையும் படியுங்கள் : IPL 2025 | பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அபார வெற்றி!
இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27ம் தேதி உருவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தென்காசி
தேனி
திண்டுக்கல்
திருப்பூர்
கோயம்புத்தூர்
ஈரோடு
நீலகிரி
கரூர்
விருதுநகர்
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சேலம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
நாமக்கல்
திருச்சி
மதுரை
தூத்துக்குடி