Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை - அப்படி என்னதான் இருக்கிறது ரத்னா பந்தரில்?

08:57 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய பகுதியான இந்த ரத்னா பந்தரில் என்னதான் இருக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரிஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையை ஜூலை 14-ஆம் தேதி திறக்கலாம் என ஒடிசா மாநில அரசு நியமித்த உயர்நிலைக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது. இதன்படி இன்று பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த அறை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 1978-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பூரிஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மற்றும் தொலைந்து போனதாக சொல்லப்படும் அதன் சாவி குறித்த விவகாரங்கள் பூதாகரமாக பேசப்பட்டன. தற்போது ஆட்சியை பிடித்துள்ள பாஜக முன்னர் ஆட்சி செய்த பிஜு ஜனதா தள கட்சிக்கு எதிராக இந்த விவகாரத்தை தீவிரமாக பரப்புரை செய்தது.

இந்த நிலையில்  46 ஆண்டுகளுக்குப் பின் இன்று பிற்பகல் 1:28மணிக்கு பூரிஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையை மீண்டும் திறக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்போடு பொக்கிஷ அறையை திறந்தனர். ரத்னா பந்தர் எனும் பொக்கிஷ அறையில் உள்ள நகைகளை மதிப்பிடும் பணி நாளை தொடங்க உள்ளது; அனைத்து பணிகளும் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ரத்னா பந்தரில்?
Tags :
Jagannath TempleodishaOsidha GovtPuriPuri Jagannath TempleRatna BhandartreasureTresure
Advertisement
Next Article