தனித்தீவான புன்னைக்காயல் கிராமம் - உணவு, தண்ணீர் கேட்டு மீனவ மக்கள் நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை..
தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீர் புன்னைக்காயல் கிராமம் வழியாக செல்வதால், அப்பகுதி தனித்தீவு போல் இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் உணவு, நீர் இன்றி தவிப்பதாகவும், எனவே உதவி வேண்டி நியூஸ்7 தமிழ் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவர்கள் தவித்து வருவதாகவும், அரசு சார்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டிய அவர்கள் தங்களுக்கான உதவிகளை கோரி நியூஸ்7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.