Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“புதுக்கோட்டை - நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை!" - ஆய்வில் வெளியான தகவல்!

12:45 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், சங்கம்விடுதி ஊராட்சியிலுள்ள குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த ஏப். 25ஆம் தேதி மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.   அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மேலே ஏறிச் சென்று பார்த்த இளைஞர்கள் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.  இதனையடுத்து அந்தத் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரி,  ஆய்விற்காக பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.   இந்த நிலையில்,  நீர் தேக்க தொட்டியில், மாட்டு சாணம் கலக்கவில்லை என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

 

நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதில் தேங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் மாட்டு சாணம் என்று நினைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  குடிநீர் தொட்டி கடைசியாக எப்போது சுத்தம் செய்யப்பட்டது? ஏன் சுத்தம் செய்யப்படவில்லை? என்று ஊராட்சி செயலாளருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.  அதற்கு, இனிவரும் காலங்களில் 15 தினங்களுக்கு ஒரு முறை மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படும் என்று ஊராட்சி செயலாளர் பதிலளித்துள்ளார்.

இருப்பினும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யாதது மற்றும் அதனை கண்காணிக்காமல் விட்டதற்காக ஊராட்சி செயலாளர் காளிமுத்து மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது-

Tags :
drinking waterPudukkottaiWater
Advertisement
Next Article