புரோ கபடி | புனேரி பால்டன், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் வெற்றி!
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 41-36 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.
12 ஆட்டங்களில் 9இல் வெற்றி பெற்ற புனேரி பால்டன் பாயிண்ட்ஸ் டேபிளில் 2வது இடத்திலும், 11 ஆட்டங்களில் 9இல் வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 5வது இடத்திலும் உள்ளன. இதனைத் தொடர்ந்து, நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெங்கால் வாரியர்ஸை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர்.
ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முடிவில் 47-40 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது. 11 ஆட்டங்களில் 3இல் மடடுமே வெற்றி பெற்ற குஜராத் ஜெயன்ட்ஸ் பாயிண்ட்ஸ் டேபிளில் 10வது இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 10இல் 3இல் வென்று 11வது இடத்திலும் உள்ளன.