புரோ கபடி லீக் | வெல்லப்போவது யார்? புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்!
ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தில் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 8 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. தமிழ் தலைவாஸ் உள்பட 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.
தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் புள்ளிகளை அள்ளிக் குவித்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற கணக்கில் பாட்னா பைரட்ஸை வீழ்த்தியது. இதனால் பாட்னா பைரேட்ஸ் வெளியேறியது. தொடர்ந்து, இன்று நடைபெறும் 2வது தகுதி சுற்றில் புனேரி பால்டனை தெலுங்கு டைட்டன்ஸ் சந்திக்கிறது. இந்த போட்டியில் எந்ந அணி வெல்ல போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இரு அ ணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியுடன் மோதும். இறுதிப்போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது.